பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

அடியெடுத்து வைக்கு மிடமெலாம் - மலர்கள்
அள்ளி யள்ளிச் சொரியத் தமனியக்
கொடிய சைந்த தென்னத் தெய்வமும் - கவிஞர்
குடிலைத் தேடிக் கொண்டு வந்தது!

இந்த வுபூரில் கவிஞ னில்லமும் - இருக்கும்
இடமெ தென்று தெய்வம் வினவவும்
தந்தி ரத்தில் காசு சேர்ப்பவன் - தோன்றித்
தனது வீட்டுத் தடத்தைக் காட்டினான்!

சிலையைப் போல்பு தைந்து நின்றனன் - கவிஞன்
'சைய்வ தென்ன வென்ற திகைப் பொடும்.
'கவிஞன் வாழ்க வென்னுங் கூக்குரல் அங்கு
காது செவிடு படவொ லித்ததே!

79