பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

அந்திப் போதைனை நொந்திடச் செய்ததால்,
அங்கம் யாவு மாடித் தளர்ந்தன!
சொந்தத் தாயி னுயிரைக் கவரவே
சோரன் போல்வரு மந்திப் பொழுதெனை
நிந்த னைமொழி சிந்தியென் நெஞ்சினில்
நீக்க மற்ற துயரம் நிறைகையில்,
விந்தை யன்னை விரும்பி யழைத்தெனை
வேட்க நோக்கியமர்த்தி விளம்பினாள்!

'வண்ண மேனி வலுவைக் குலைத்துநோய்
வாளி னிக்கணம் வாங்கியே என்னுயிர்
விண்ணி லேற்ற விரும்பினன் காலனும்:
விதிமுறையுமிது வாதலின் நீயிதை
எண்ணி யுள்ளம் அழித லிழி'வென
ஈன்ற தாய்தன் னிறுதி யியம்பவும்,
கண்ணி ரண்டு மருவிக ளாகவே
கலுழ்ந்து கேவிக் கதறிட லாயினேன்!

சேர அன்னையின் சிந்தை யறிந்திடச்
'செய்வ தென்'னென நைந்து வினவக்கண்
ணீரை நீக்கு; நிலை குலைதல்தவிர்!
நெஞ்சைத் தேற்றிக்கொ ளென்மக னே!யெனக்
கோர, அக்கணம் நானது கொள்ளவே
கூறி னாளன்னை கூர்த்த மதியொடும்!
ஊரி லுள்ள - உழைப்பவர் கண்ணிலே
ஒரேஎ வொருதுளி நீரொழு காவிதம்.

91