பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 பண்பாடிக் கூத்தாடிப் பாரெங்கும் சென்றோடிப் பண்பாடு காட்டிப் பயிற்றுவிக்கும் தாயகமாய்த் , தெற்கில் குமரியொடு சேரா வடதிசையில் நிற்கும் ஒருவிந்தம் நீள்கடல்கள் கீழ்மேலாய், எந்நாளும் மாறா இயல்பமைந்த எல்லையதாய் , இந்நான்கின் ്T്)ങ്ങഓ யிடைவிரிந்த நீள் பரப்பாய்க் , கன்னடமாய் ஆந்திரமாய்க் கண்குளிரும் கேரளமாய் இன்னவற்றின் தாயாய் இலங்கும் தமிழகமாய்க், கூடும் திராவிடமாய்க் கோலோச்சும் தென்னகமே நாடி வருகின்ற நம்நாடு பொன்னாடு: புனல் வளம் நாடா வளத்ததுவாய் நாடி வருவோர்க்குக் கோடா மனத்தால் கொடுக்கும் இயல்புடைத்தாய்த் , தள்ளா விளைவயலில் தாளாற்றும் ஏருழவர் கொள்ள துழைத்துக் குவிக்கும் வளத்ததுவாய், வான மழைநீரும் வற்றாத ஊற்றகமும் கான மலையுதித்துக் காக்கின்ற ஆறுகளும் ஆயபுனல் மூன்றாலும் ஆக்கும் பெரும்பொருளால் தேயமெலாம் வேட்கின்ற சீர்மைத் தகைமைத்தாய், வள்ளுவம் காட்டும் வளமெல்லாம் தன்னகத்துக் கொள்ளும் திருநாடே கூட்டாட்சித் தென்னாடு: குறிஞ்சி வளம் நீளும் தொடர்மலைகள், நெஞ்சம் கவருமெழில் ஆளும் உயர்மலைகள், கோடை அனல்போக்கும் வண்ணக் குளிர்மலைகள், வாய்க்கும் பழமலைகள், எண்ணக் குறையாமல் எத்துணையோ ஈங்குண்டு;