பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 அகப்பகைவர் பாரதியின் பேர்சொல்லிப் பாங்குபெறும் நல்லன்பர் வீரமிகு பாடல்களை வெட்டிவிட்டுக் காட்டுகின்றார்; சூரன் முகத்திற் சுருண்டுவளர் மீசைதனில் ஓரங் குறைத்தால் உருவமது பாரதியோ? தாள் குறைத்து மேல்குறைத்துத் தண்டொன்றே கைப்பற்றி ஆள் பிடித்து வாழைஎன ஆர்க்கின்றார் சூதுடையார்; பாரதி வந்தான் வீர உருக்குறைத்து வேடிக்கை காட்டுகின்ற பேரின் செருக்கொழிந்து தீயாதோ? என்றேன்.நான்; தீயு மடா! தீயுமடா! தீப்பகைவர் தற்செருக்கு; நீயுமெழு! நீயுமெழு நேர்நின்று போர்தொடுப்பாய்” என்ற வுரைகேட்டேன் ஏறனைய பாரதியும் ஒன்றி எனது மனத் துள்ளே நகைத்துநின்றான்; ”க்ானத்து வாழ்புலியாய்க், கத்துபுனல் நீந்திவரும் மீனத்தில் நற்கயலாய், மேல்நோக்கிப் பாய்கின்ற அம்பிருக்கும் வில்லாகி ஆரிருளை ஒட்டுகின்ற செம்பொனிள ஞாயிறெனச் செக்கச் சிவந்துநின்றான்; நின்றானை நோக்கி நிலையெல்லாம் பேசுகநீ என்றேனை நோக்கி இளையவனே! என்தம்பி! உன்னுளத்தே நின்றிங்கே ஊதுகின்றேன் வெண்சங்கம் முன்னெழுந்து போர்தொடுக்க முற்படுநீ! ஒன்றுரைப்பேன்’ என்றுதும் சங்கொலியை என்னால் இயன்றவரை நின்றுாது கின்றேன் நிமிர்ந்து