பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 தீய நட்பு தகுதியிலார் தம்புகழே பரப்பு தற்குத் தாளமிடும் நட்புண்டு; நண்பர் தம்முள் பகைவிளைத்துக் கோள்சொல்லி இன்பங் காணும் பதர்மனிதர் நட்புண்டு; மூன்று நான்கு பகலிருக்கும் சிற்றுண்டி நட்பும் உண்டு; பண்பில்லாச் சிறுமதியர் செய்த ஒன்றை மிகவுரைத்து மகிழ்கின்ற நட்பும் உண்டு; மெதுவாக வஞ்சிக்கும் நட்பும் உண்டு; (15) தொடர்வண்டி நட்புண்டு; பயனில் பேச்சுத் துணைக்காகத் திரிந்துவரும் நட்பும் உண்டு; குடர்மிகுந்த தொந்திக்குப் பூசை செய்யக் கும்பிட்டு வால்பிடிக்கும் நட்பும் உண்டு; பிடர் சொரிந்து வாய் பிளந்து புகழ்ந்து பேசிப் பின்புறத்து வசைபொழியும் நட்பும் உண்டு; கடன் தந்து வளர்க்கின்ற நட்பும் உண்டு: காசினியிர் இவை எல்லாம் நட்போ? சொல்வீர் (16) நட்பு மலர் உளமொன்றி உயிரொன்றி நன்மை தீமை உறுகாலத் துடனொன்றி உயர்ந்த செல்வ வளமென்றுங் குலமென்றும் சமய மென்றும் வகைப்படுத்தி உணராமல் வாழின் உள்ளக் குளமன்றில் நட்புமலர் பூத்துக் காட்டும்; குவலயத்தில் சிலரே இப் பண்பு ணர்ந்தார்; களவொன்றும் நெஞ்சுடையார் பணத்தை வீசிப் பெறமுயல்வார் கடைச்சரக்கா இந்த நட்பு? (17) குடர் - குடல்