பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவர்: செந்தமிழ்க் காவலர் அ. சிதம்பரநாதனார் தலைப்பு: தமிழ் காட்டும் நல்லுலகு - யாதும் ஊரே யாவரும் கேளிர் இடம் : வானொலி நிலையம் - திருச்சி 1 4–1 — 1957 пътет

யாதும் ஊரே யாவரும் கேளிர் வெண்கலிப்பா வணக்கம் செந்தமிழ்க்குக் காவலரே சிதம்பரநா தப்பெரியீர்! பைந்தமிழின் பாடலுக்கோர் பரம்பரையைத் தந்தவரே! இந்தக் கவியரங்கில் எழுந்தருளுங் கவிமணிகாள்! வந்து செவிமடுப்பீர்! வணங்கிக் கவிசொல்வேன்: சு வை பிறந்தது ஒங்கும் மலைக்குகையில் உயர்ந்த மரக்கிளையில் ஆங்காங்கே தனிமனிதன் ஆர்ப்பரித்து வாழ்ந்திருந்தான் கூட்டு வாழ்வறியான் கொல்லும் வினையுடையான் காட்டு வாழ்வறிவான் காணும் விலங்கினத்தை வேட்டைத் தொழில்புரிந்து வேகாத் தசையுண்பான், காட்டு நெருப்பிடையே கருகிக் கிடந்தவொரு பரம்பரையைத் தந்தவர் - அன்று கவியரங்கிற் கலந்துகொண்ட பாவேந்தர் பாரதிதாசனார்