பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 என்னும்போ துடல்சிலிர்க்கும் எலும்பெல்லாம் நெக்குருகும் உன்னும் உளங்குதிக்கும் உடலெல்லாம் தான் குதிக்கும் இன்னும் நாம் அவ்வுலகை ஏறிட்டும் பார்த்திலமே என்னும்போ துளம்வருந்தி இரங்கலலால் என்செய்வோம்? இனியேனும் அவ்வுலகை இங்காக்க முற்படுவோம் முனியாமல் அவ்வுலக முழுப்பொருளும் காண்போம்நாம்: யாதும் ஊரே யாதும் நம் ஊரென்றால் ஏதிலர்தம் நாடெல்லாம் சூதுமுறை செய்து சுருட்டி விழுங்குவதா? யாதும் நம் ஊரென்றால் ஏதிலர்க்கு நம்நாட்டைச் சூதுநெறி யறியாமல் சுருட்டிக் கொடுப்பதுவா? அன்றதுதான் பேதைமையாம்; அவ்வவர்க்கு மொழியுண்டு தொன்றுதொட்ட பண்புண்டு சொல்வதற்கு நாடுண்டாம் இவ்விவற்றால் பகையின்றி எதிர்ப்பின்றிப் பிறவற்றை வவ்வும் மனமின்றி வாழும் நெறியறிந்து நட்புறவால் உளமொன்றி நடப்பதுவே அதன்பொருளாம் பெட்புற்றுத் தமிழ்காட்டும் இவ்வுலகைப் பேணுவம் நாம்; யாவரும் கேளிர் அனைவரும் நம் கேளிர்என்ற அம்மொழியும் அப்படியே, இனம்பலவாய் வாழ்ந்தாலும் இறுமாந்து பகைகொண்டு விலங்கினத்தின் கீழினமாய் விளையாடித் திரியாமல் குலங்கருதி மேலென்றுங் கீழென்றுங் குறியாமல் அவ்வவர்தம் நெறிபோற்றி அன்பொன்றே குறியென்று செவ்வியநன் மனங்காத்துச் செயலறமும் மிகக்காத்துத் தோழமையால் ஒன்றாகித் துய்மையொடு உறவாகி வாழ விழைகஎன வகுத்ததுவே அதன்பொருளாம்; ஏதிலர் - அயலவர்