பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னுட்டார் வீரம் தெரியாமல் போர்தொடுத்து வெந்காட்டி மாற்றுருவில் ஒடுகின்ற வீரரைப்போல் ஓங்கும் மலைபோல் உராயும் முகிற்கூட்டம் தேங்கிக் குளிர் தாக்கத் தேய்ந்தே உருமாறி நீராகி ஆருகி நிற்காமல் ஓடி ஒரு பேராழி யுள்மறையும் பெற்றிமையும் ஈங்கிருக்கும்; உச்சி மலைவெடிப்பின் உள்ளிருந்து போந்துபோல பச்சிலைகள் தண்மலர்கள் பற்றிக் கொடுவந்து தத்தித் தவழ்ந்து தடைசெய்யும் பாறைகளைக் குத்திப் பிளந்து குதித்தோடி மேலிருந்து தார்முரசம் என்னத் தடதடவென் ருர்த்திரங்கிக் கார்முழக்கம் அஞ்சக் கடுகிவரும் பேரருவிக் கூட்டம் பலவுண்டு, கூடி முகிலினங்கள் காட்டகத்து மேய்வன போல் காணும் களிறிட்டம் ; தேக்கும் அகிலும் திரண்டுருண்ட சந்தனமும் காக்கும் குளிர் தென்றல் கார மிளகுடனே ஏலம் இவைபோன்ற எஞ்சா வளஞ்சுரந்து காலம் முழுதும் களிப்பிக்கும் நம்நாடு ; முல்லை வளம் கூர்த்துக் கிளேத்தெழுந்த கொம்புடைய கொல்லேற்றைச் சேர்த்துப் பிடித்துத் திணறவைக்கும் கா அளயர்கள் வீரவிளை யாட்டால் விரும்பும் குலமகளைச் சேர மணமுடிக்கும் செம்புலத்துக் காடெல்லாம் இல்லை எனவுரையா தீத்துவக்கும் வள்ள ஆலப்போல் முல்லே முறுவலித்து மொய்க்கும் சுரும்புகளுக் கின்சுவைத்தேன் உண்பித் திணிதிருக்கும் முல்ஜலநிலம் புன்செய்ப் பயிர்வளங்கள் பூரிக்கும் கானகத்துக் 104