பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழையடி வாழை பாரதியார் நேரிசை வெண்பா முருகா : முதல்வா 1 முத்தமிழில் நெஞ்சை உருகவைக்கும் மாணவர் காள் ! உண்மை-மருவியநல் ஞானஞ்சேர் ஆசிரிய நல்லோரே ! என்கவியை நானுஞ்சொல் கின்றேன். நயந்து எண்சீர் விருத்தம் தமிழ் வாழ்த்து கவிதைஎனும் காதலிபால் உன்னைப் பெற்றேன் கண்ணம்மா !! தமிழ் மகளே ! முத்த மிட்டேன் கவிவெறியோ கள் வெறியோ அறிய கில்லேன் கனவுலகில் பறக்கின்றேன் தரையில் நில்லேன் செவிபொருந்தும் விழிகண்ணிர் சிந்தக் காணின் செங்குருதி பீறிட்டென் னெஞ்சிற் கொட்டும் புவி புகழும் நீகலங்கப் பார்த்து நில்லேன் போர்தொடுப்பேன் உனக்காப்பேன் வாழ்த்தி நிற்பேன் 123