பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ப்ெபுரை | | கவிஞர் முடியரசன் அவர்களைத் தமிழகம் நன்கறியும். அவர்தம் கவிப்பெருமை வெளிநாடுகளிலும் பரவி வருவதை நாம் உணர்வோம். முத் தமிழ்விழா, கோவையில் நடை பெற்றபோது முதற்பரிசு பெற்றது, முடியரசன் கவிதை. அன்று, முடியரசன் கவிதையைப் பரிசுக்குரியதெனத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியவர் பு ர ட் சி க் கவி ளு ர் பாரதிதாசனு ர். அன்றுமுதல் எத்தனையோ க வி ய ர ங் க ங் க ளி ல் முடியரசன் பங்குகொண்டு, தமக்கெனத் தனியொரு சிறப்பிடமும் பெற்று வருகிருர். அரங்கேறியவற்றுட் சில வற்றைத் தொகுத்து வெளியிட இசைந்த கவிஞர் அவர் கட்கு எங்கள் உளங்கனிந்த நன்றி. மாற்றுச் சிறந்த கவிதைகளை, அறிவெனும் உரைகல்லால் ஆய்ந்துரைத்த, செந்தமிழ்க்குக் காவலராம் சிதம்பரங்ாதனுர்க்கு எங்கள் நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிருேம்.

  • எல்லோர்க்கும் புரியும் வசன கவிதைகள் பன்மொழிக் கலப்போடு, பகட்டு நடைபோடும் இக்காலத்தில், எளியன வாக, அதற்காகத் தமிழின் இயல்பை விட்டுவிடாமல்இனியனவாக, அதற்காக இலக்கணத்தைப் புதைத்து விடாமல் - பல்லாயிரக்கணக்கான மக்களும் புரிந்து கொண்டு போற்றும்படியாக, அதற்காகக் கவிஞரின் ஏற்றத்தை இழந்துவிடாமல் கவியரங்கேறியவை கவிஞர் முடியரசனின் பாடல்கள். இதற்குச் சான்று, இதோ அவரது கவிதைகளே. படித்துச் சுவையுங்கள்.

தெய்வராயன். திருச்சி. } [15–4–6 o. முத்து புத்தக நிலையம்,