பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை நகரில்

43


இவ்வாறு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் வெறும் ஏட்டுப் படிப்பினைப் பயின்றேன் என்று சொல்வதைக் காட்டிலும் வாழ்வின் அடிப்படைக்குத் தேவையான எண்ணற்ற பாடங்களைப் படித்தேன் என்று கூறிக்கொள்வதே அமையும் என எண்ணி மேலே செல்கின்றேன். அத்தகைய ஆக்கநலம் தந்த அந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும் அதைத் தோற்றுவித்த அண்ணாமலை வள்ளலையும் வாழ்த்துகிறேன்.