இ) காட்டு வழிதனிலே
இராகத்தின் துடிப்பு அந்தரங்கமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இங்கும் நாட்டியக் கலேயிற்கண்ட மெளனத்தின் ஆற்றலே வெளியா கின்றது.
ஒவியத்தின் குரலே மெளனம், வர்ண ஜாலங் களே உணர்ச்சிகளைப் பேசுகின்றன. ஒவியன் யாதானு மொரு உணர்ச்சியைத் தோற்றுவிக்கத் தீட்டிய காட்சி அதிற் காண முடியாத ஆழத்தை யெல்லாம் மெளனக் குரலினல் நம் உள்ளத்திலே தட்டி எழுப்ப முயல்கிறது. கல்லிலும் மற்ற உலோகங்களிலும் வடித்தெடுத்த சிற்பம் அந்த மெளனத்தின் பேச்சை உள்ளத்திலே ஒலிக்குமாறு செய்ய எழுந்த கனவடி வாகும். உலகம் போற்றும் தில்லைக் கூத்தனது திரு வடிவக் காட்சி அவனுடைய திருநடனத்தின் ஒரு நிலையைக் காண்பித்து மற்ற நிலைகளையெல்லாம் நமது கற்பனையிலே உருக்கொள்ளத் தூண்டி மெளனமாய் நிற்கிறது.
கவிதை என்னும் அருங்கலையிலே மேலே கூறிய மற்றக் கலைகளெல்லாம் கலந்து இணைந்திருக்கின்றன. அது சொல்லென்னும் ஒலிச் சேர்க்கையில்ை நாட் டியமும் சிற்பமும் காட்டும் உணர்ச்சிக் கோலங் களையும், ஒவியத்தின் வர்ணக் கலவைகளையும் உள்ளத் திரையிலே மின்னும்படி செய்கிறது. சொல்லிலும், சொற் கூட்டத்திலும் எழுகின்ற அந்த இசை ஊற்றும் அதற்கு உறுதுணையாய் நிற்கிறது. ஆகவே முன்பே கூறியது போல உணர்ச்சிகளை முற்றிலும்
பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/92
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
