பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313

3 # 3

'ஐயா, அமீளு! கோர்ட்டு உத்தரவை அமல் படுத்தி நடவடிக்கை எடுங்கiம்...சீக்கிரம்' என்று உத்தரவிட்டு, ஊர்க் கூட்டத்தை ஊடுருவிய வண்ணம் ஏளனமாக எக்காளமிட்டுச் சிரிக்கலாஞர் சிங்கப்பூர்ச் சீமான் ராமையாத் தேவர். -

'டேய், சண்டாளப் பாவியே...ராமையா!' என்று விண்ணும் மண்ணும் அதிர அலறிக் கொண்டே தன் மைத்துனன் ராமையா மீது பாய்ந் தார் ஆறு கரை ஆதிமூலம். -

பதட்டித்துடன் பாய்ந்தோடிப் பெற்றவரைத் தடுத்தான் வீரமணி. பிறகு, தயங்கிப் பயந்து முன் னேறிக் கொண்டே, நீதிமன்றச் சேவகருக்குக் குறுக்கேமறித்து நின்ருன்! அமீனு ஐயா! இப்படியே நிற்கிற இடத்திலேயே நில்லுங்க. வாதி ராமையாத் தேவருக்குப் பிரதிவாதியான என்ளுேட தகப்பளுர் கொடுக்க வேண்டிய கடன் முதல் ரூபாய் இருபதா யிரமும் இதுக்குச் சட்டப்படி உண்டான வட்டிப் பணம் ரூபாய் மூவாயிரத்து அறு நூற்றுச் சொச்ச மும் இதோ, கைக்கு மெய்யாக வச்சிருக்கேன்...!" என்று நாணயமும் கம்பீரமும் குலுங்கிட, அடிமடி யிலிருந்து கரன்ஸி நோட்டுக் கத்தைகளை வீரமணி வெளியே எடுத்துக் காட்டினன். கதிரொளியில் அசோகச் சக்கரங்கள் மின்னிச் சுழன்றன.

'ஊம், புறப்படுங்க. கோர்ட் அடைக்கிறதுக் குள்ளே நானே அங்கே கட்டிப் பிடுவேன். இன்னும் கால்மணி நேரத்திலே அறந்தாங்கியிலேருந்து வருற.