பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59

மாய்த் தேறிவிட்டதாக ஆரியப்பூ தான் காதிலே ஒதுச்சுங்க. இங்கே கமுக்கமாய் வந்து குதிக்கிறதுக்கு காலம்பறவே பிடிச்சுத் துடிச்சேனுங்க. அகிலாண் டத்தையும் அமிர்தத்தையும் கேட்டுக் கிடுங்கi கொஞ்ச முன்னுடி தான் எங்க அப்பன்காரப் புண்ணியவானுேட தலை மறைஞ்சுது. ஊம், நடங்க அத்தான்!” என்று துருசுப் படுத்தினுள் சிங்கப்பூர்க் காரர் மகள். 'உதயத்திலே நான் தண்ணி இறைச்சுத் திரும்பையிலே, சாலையோரத்திலே உங்களை எட்டத்திலே வச்சுக் கண்டப்போ, எனக்கு ஒரு விசயமும் தெரியாதுங்களே!' என்று குறிப்பிட வும் தப்பவில்லை, வீரமணியின் முறைப்பெண்.

ஆதிமூலத் தேவருக்குக் காப்பியில் சூடு பறக்க வேண்டும். இல்லையேல் அவரது பொறுமை பறந்து விடும். காசி, சாயத்துண்டை எட்டாக மடித்து, அதில் காப்பிக் குவளையை வைத்துக் கையில் ஏந்தி வந்து நீட்டிய சடுதியிலேயே அதை வாங்கி மட மட வென்று குடிக்க ஆரம்பித்த அவர், நைலக்ஸ்’ புடவையின் சலசலப்பும் சரிகை வேட்டியின் பட படப்பும் முயங்கிக்களித்திட்ட ஒசைக்கேட்டுப் பின் புறம் திரும்பிப் பார்த்து விட்டு, மீண்டும் தம் கருமத்தில் கண் ஆனர். சொட்டு மிச்சம் வைக் காமல் பருகித் தீர்த்த பின்னர் தான், அவர் ஏப்பம் விட்டார்; பார்வையை நிமிர்த்தினர். காப்பியின் சூடு அடிவயிற்றில் இன்னமும் சுட்டுக் கொண்டி ருந்தது. சூடு என்ருல் அதில் அவருக்கு ஓர் அலாதி, ருசி தான்!