பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன் பாருலகில் முன்நடந்த பழமை உரைக்கிறேன்

துஷ்டருக்கு எத்தனைதான் சொன்னலும் சொன்னமொழி அண்ணமே பொறுத்தல் ஆவதுண்டோ மன்னவனே வஞ்ச அரவினுக்கு வாய்த் தமிர்தம் தானளித்தால் நஞ்சை உதவுமல்லால் நல்லமிர்தம் தந்திடுமோ

தேள் தனக் கையால் சேர அணைத்தெடுத்தால் — - - ஆள்தனைக் கொட்டாமல் அமிர்தம் கொடுத்திடுமோ 瞿博

நெருப்பைக் கனல்பொறியாய் நேரிட்டு ஒதுங்காமல் விருப்பமுடன் முடிந்தால் வேகாமல் விட்டிடுமோ

பாட்டைவைத் தானெளிதாய் பார்த்துச் சுழற்ருவிட்டால் வெட்டாமல் விட்டிடுமோ வேந்தரே கேளுமைய்யா

துஷ்டருக்கு உரைத்கபுத்தி சிறக்குமோ லோகந்தன்னில் இஷ்டமாய் சிறையெடுத்தேன் இது ஒருபெரிதோ

முன்னல் திட்டமாய் பெரியோர்பெண்ணத் தேடியே யெடுத்தபேரை

பொட்டெனச் சொல்லுவேனிப்போ புகழுரை

செய்குவீரே.

வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன் பாருமையா யானடியேன் பணிந்து உரைக்கின்றேன்

பார்வதியாள் தானிருக்க பரம சிவனரும் ஒர்சடையில் கன்னிதனை ஒளித்து வாழலேயோ

நலமுடைய லஷ்மியாள் நன்ரு ய் அருகிருக்க உலக மளந்ததொரு உத்தமனம் மாயவளுர்

தேச மதிலாய் சிறக்கவே கொண்டருளி சத்தியபாமாவைத் தழுவி யனையலேயோ

அன்ன.மதிலேறும் ஆனதொரு பிர்மாவும் வர்ணக் கலைமகளை வாக்கிலே வைத்தருளி

தானே படைத்துச் சமைந்ததொரு ஊர்வசியை மானே யெனத்தொடர்ந்து மருவிப் புனரலையோ

கந்தனுடன் தெய்வான கலந்து அருகிருக்க வந்து குறவருட வள்ளிதனைச் சேரலையோ