பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

5

ஆட்பாடி தன்னில் ஆன இடைக்குலத்தில் வாய்ப்பாகக் கருப்பாயி வந்துமிகத் தான்பிறந்தாள்

காச்சி மதுவெடுக்கும் கனத்ததொரு குலத்தில் பாச்சூரில் பூவாயி பாங்காய் பிறந்திருந்தாள்

மாவடி மங்கலத்தில் வாழும் இடைக்குலத்தில் ஞானியவள் நல்லதங்காள் நன்ருய் பிறந்திருந்தாள்

பொன்னை பூவுலகில் புத்துார் கிராமத்தில் வண்ணுர நல்லியென வந்துமிகப் பிறந்தாள்

கனத்த தவமிகுந்த களத்தூர் மாநகரில் அனந்த நாராயணர் அவர் தனக்கு நான்பிறந்தேன் துங்க சோமாசிக்கு சிறந்த உடன்பிறப்பு மங்காயி தள்வயிற்றில் மகிழ்ந்து பிறந்தேனே

ஆறுபேர் பிறந்தவகை சொன்னதளுல்

யாம்கேட்டோம் அவர் தனக்கு

சீருடனே உந்தனுட தொடர்பு

நடந்தவகை திறமதாகக்

கூறுமென்று ராசனவர் கேட்டிடவே

க: இது, வளுர் குாையதாக

பாருபையா இன்னியிடம் யானுறவாய்

நடந்தவகை பகருவேனே.

அரனடி பணிந்தேற்றும் அனந்த நாராயணஞர்

அவர் வயற்றிலே பிறந்தேன்

அன்புடைய சோமாசி அய்யர்க்குப் புத்திரியாய்

ஆரிய மாலைவந்தாள்

வரமுடைய ஒந்தாயி செட்டிகுலம் தன்னில்

வயிரசெட்டி பாளையத்தில்

வந்தே பிறந்திட அவளையே சிறைகொண்டு

வைத்தேன் முதலைப்பாரில்

திறமுடைய சலுப்பச்சி யாகவே சவுதாயி

சென்றங்கு பிறந்திட

யானவ்விடம் சென்று திறமுடனே களத்தாரில்

கோழி கொன்றேன்