பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் நாகசண்முகம் 委2念 உடற் கூண்டிலிருந்து உயிர்பறவை பறந்து விட்டபிறகு அவர் எப்படிப் பேசுவார் ? தங்களுடைய மகிழ்ச்சிக்கெல்லாம் காரணமாக இருந்தவர் பிரிந்ததை அறிந்து ஊர் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாளுர் கள், அழுதார்கள், புலம்பினர்கள். என்ருலும் தங்களைத் தேற்றிக் கொண்டு துணை இழந்து கொடிபோல் துவண்ட கோதையை, இராமநாதன் மனைவி சீதையை அனைவரும் சென்று தேற்றிஞர்கள். தன் ஒரே செல்வனின் அறிவுக்கூர்மை நிறைந்த விழிகளைப் பார்த்து-தன் கணவனைப் போலவே இருந்த அவன் தோற்றத்தை நோக்கி அந்தக் கோதையும் மனம் தேறினுள். படகை இழந்தவனுக்குக் கிடைத்த பற்றுக் கோடுபோல கணவனே இழந்த சீதைக்குத் தயாளன் உற்ற துணையாக வளர்ந்து வந்தான். பருவங்கள் மாறின. ஆண்டுகள் கரைந்தன. தயாளன் உருவத்தில்தான் எத்தனை மாற்றம் இராமநாதன் இந்த உலக வாழ்வை நீத்தபோது பாலகளுக இருந்த அவன் பதினெட்டு வருடங்களைக் கடந்த போது மற்ருெரு இராமநாதனுகவே காட்சி தந்தான். ஊரார் அவனைச் சின்ன இராமநாதன் என்றே குறிப்பிட்டு வந்தார்கள். - - - கோடி கோடி செம்பொன் கொடுத்தாலும் பெறமுடியாத குணக்குன்ரு:ன மைதிலியை தயாளனுக்கு சீதை மணம் முடித்து வைத்தாள். - கங்கையிலும், காவிரியிலும் கழிவு நீர்கள் கலப்பதற்கு, என்ன காரணம் சொல்வது? - - புனிதரான, புகழின் உருவமான இராமநாதனின் மகன் மற்ருெரு இராமநாதன வருவான் என்ன தான் பெற்றவளும், மற்றவர்களும் நினைத்தார்கள்: அவன் புகழ் சேர்க்கும் இராம நாதனுக வராவிட்டாலும் சாதாரணத் தயாளனாகவாவது இருந்திருக்கலாம். ஆனல் தரம் கெட்டவகை தந்தையின் புனித மான சேவைகளுக்கே உலைவைப்பவனுக, சுருங்கச்சொன்னல் குடிகர்ரகை மாறினன். - நினைவோடு வீட்டை விட்டுச் சென்று நினைவு தடுமாறிய நிலையிலே வீட்டை அடையும் கணவனைக் கண்டு மைதிலி. நைந்தாள், ! - -- ~ - - - - - - - -