பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199

மாஷாவும் நடந்த பிற்பாடு மிக்க
மகிழ்ச்சியாய் பிள்ளைமார் பாளையத்தை கூட்டி
கிழக்கு முகமாகவே நடந்து அப்போ
சிங்கா சனாதிபதி சிவகங்கை சேர்ந்து
முத்து வடுகையரைக் கண்டு நல்ல
முனைவீரர் சந்தோஷச் செய்திகளைச் சொல்லி
கான்சாயபு பயம் போச்சு தென்று ஐயோ

களிப்புடனே பிள்ளைமா ரரண்மனை போய்ச் சேர்ந்தார்