பக்கம்:காப்பியக் கதைகள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறமும் துறவும் 151 மோனநிலை : மண நூலாகத் தொடங்கி, மண நூலாகக் காட்டி மண நூலாகவே முடிக்க விரும்பிய தேவர், சீவகன் கேவல மடந்தையோடு இரண்டறக் கலந்த நிலையினை, * கேவல மடந்தை யென்னும் கேழ்கிளர் நெடிய வாட்கண் பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னொரு பாக மாகக் காவலன் தான்ஓர் கூறாக் கண்ணிமை யாது புல்லி மூவுல குச்சி யின்பக் கடலினுள் மூழ்கி னானே' (3117) என்று கூறி முடிக்கின்றார். சீவகன் அவ்வாறு சிறந்த வழியில் பிறவாப் பெருநெறி யடைந்தான். அவன் வழிகாட்டத் துறவுநிலையேற்ற தேவிமார் எண்மரும் தூய துறவற நெறியினின்றும் சிறிதும் வழுவாதவராக இருந்து இந்திர பதவிகளைப் பெற்றுச் சிறந்தார்கள். c42>sa (முற்றும்)