பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480

போயிற்று. அருமையான செல்வத்தைப் பெற்ற ஒருவன், அது பறிபோய் விடுமோ என்ற அச்சத்தால் தக்க பாதுகாப்புள்ள கோட்டைக்குள்ளே அதை வைத்து, அங்குள்ள காவலர்கள் அதற்குப் பாதுகாப்பாக இருக்கும் திறத்தை அறிந்து, இனி நமக்குக் கவலை இல்லை என்று இருப்பதைப் போல இருக்கிறார்.

"உங்கள் அடிமைத் தன்மை மாறாமல் இருக்க அவர்கள் என்ன செய்தார்கள்?"

"அவர்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அவர்களிடையே நாம் இருப்பதே போதுமானது. சூரியன் ஒளி நன்றாக வீசும் இடத்தில் இருள் புகுவதற்கு ஏது இல்லை. எந்தையார்க்கு ஆட்செய்யப் பெற்ற தொண்டர்களுடைய கூட்டம் பலமான கோட்டையைப் போன்றது. பக்தி உணர்வாகிய செல்வத்தை அங்கே புகுந்து யாரும் குலைக்கமுடியாது. அவ்வாறு இறைவன் பாதப் போதை அருச்சித்து ஆட்பட்டு வாழும் தொண்டர்களைத் துதித்து அவர்கள் கூட்டத்திலே கலந்துவிட்டோம். ஆகவே இனிப் பயம் இல்லை. எம்முடைய அடிமைப் பண்பு மாறாது; குலையாது. இந்த உறுதியான நிலையில் பாதுகாப்பாக இருப்பதனால் போலும் எம்முடைய சிந்தையார் செருக்குடன் இருக்கிறார்."

பணிந்தும் படர்சடையான்
பாதங்கள் போதால்
அணிந்தும், அணிந்தவரை
ஏத்தத்—துணிந்துஎன்றும்
எந்தையார்க்கு ஆட்செய்யப்
பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு?

படர்ந்த சடையை உடையவன் பாதங்களைப் பணிந்தும், பிறகு அந்தத் திருவடிகளை அலரும் பருவத்துள்ள மலர்களால் அலங்கரித்தும், அப்பால் அவ்வாறு அலங்கரித்த அன்பர்களை