பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

520

நெற்றிக்கண் உடையவன் என்று சுட்டியது, வேறுயாருக்கும் இல்லாத சிறப்புடையவன் என்று சொன்னபடி. பேய்க்கணமாயினும் இறைவனுடைய தொண்டில் ஈடுபடுவதாதலின் நற்கணமாயிற்று. பேய் என்பது அஃறிணையாதலின் ஒன்று என அஃறிணையால் சொன்னார்.]

இறைவனுக்கு ஆட்பட்டவர்களுக்கு வேறு எந்தப் பதவியும் உயர்வாகத் தோன்றாது என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியில் வரும் 86-ஆவது பாடல் இது.