பாரதியாரும் சுதந்தரமும் 23
னுக்குயிர் கோடி கொடுத்த கொள்கை படைத்த வீரர்கள் செய்த புரட்சி, பாரதியாரின் ஆவேசத் தீயை மூட்டியது. மேலும், அத் தீ யி னின் அறும் தெறித்து விழுந்த தீச்சுடர்களே பாரதியாரின் கட்டுரைகள், கவிதைகள், காவியங்கள்.
சிவாஜியின் வீரத்தை_திலகரின் புகழைகாந்தியாரின் புரட்சியை-லஜபதியின் துயரைசிதம்பரனரின் சீ ற் ற த்தை எல்லாம் தித்திக்கும் தமிழாற்பாடித் தேசாபிமானத் தீயை நாட்டு மக்கள் கெஞ்சிலெல்லாம் பற்றி எரியச்செய்தார் பாரதியார்.
சுதந்தர வெறி கொண்ட பாரதியாரின் பாடல் களில் சோகம், சீற்றம், சிந்தனே, காதல், கருணே, கடமை-அக்தனேயும் உண்டு.
தண்ணீர்விட் டோவளர்த்தோம்?
சர்வேசா? இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் ;
கருகத் திருவுளமோ? :
என்று கடவுளே நோக்கிக் கதறியழும் பாரதியாரின் கவிதையைப் படிக்கும் போது நெஞ்சம் உருகா தார் யார்?
"கூட்டங் கூடிவந் தேமாத மென்று
கோஷித்தாய்-எமைத்-துவித்தாய்! ஒட்டம் நாங்க ளெடுக்கவென்றேகப்பல் ஒட்டினுய்-பொருள்-ஈட்டினுய்! என்ற வெள்ளேயன் வீம்பிற்கு,
1. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக். 46