பக்கம்:காலத்தின் குரல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசு: 经 貂: 33 வனங்களும் அச்சுத் தயாரிப்புகளை வெளிப்படுத்திய வாறு இருக்கின்றன. தாளை வெள்ளைத் தாளாக விற்பனை செய்வதைவிட, கறுப்பு மையால் கறைபடுத்தி, பளபள அட்டைக்குள் அடக்கி. புத்தகம்' என்று விற்பதில் அதிக லாபம் கிடைப்ப கால், பத்திரிகை நிறுவனங்கங்கள் இந்த உபதொழிலையும் செய்து வருகின்றன.

  • குமுதம் நிறுவனம் (மாலைமதிக்காக) இப்படித்தான் கதை இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு, ஸ்ம்மரி கொடுத்து ஸ்டார் எழுத்தாளர்களேயோ, இதர எழுத் தாளிகளையோ எழுதச்செய்து, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி, நாவல் வியாபாரம் செய்கிறது 2000 கபாய்க்காக இரண்டே நாளில் ஒரு நாடில்’ எழுதி முடித்து விட்டதாக சம்பந்தப்பட்டவர்களும் பெருமையாகச் சொல்லிக்கொள்கிருர்கள். இப்படி இருக்கையில், தரமாவது, கற்பனையாவது, சிருஷ்டிப் புதுமையாவது !

'மாதம் ஒரு நாவல் தயாரிப்பு வரிசையில், அபூர்வமாக எப்பவாவது ஒரு நல்ல கதையும் வந்துவிடுகிறது! அது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம்தான். முற்காலத்திய பெண் எழுத்தாளர்கள், இக்காலத்திய பெண் எழுத்தாளர்கள்-பின்னவர்கள் எதனையாவது சாதித்து உள்ளார்களா? முற்காலத்திலும் பெண் எழுத்தாளர்கள் அதிகம் சாதித்தாக சொல்வதற்கில்லை.