பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 ★ காலந்தோறும் பெண்

-ணுக்கு உரிமையானதாக ஆக்கப்படவில்லை. அந்த மாங்கலிய செளபாக்கியத்துக்கான வழிபாட்டையும் இவள் வாயசைக்கும் சினிமா நடிகையின் நிலையில்தான் செய்ய வேண்டும். குருவில்லாமல்-அதாவது ஆணாகிய புரோகிதர் இல்லாமல் பூசை முடிப்பது இவளுக்கு உரிமையானதாக இல்லை.

ஏன்?...? இந்தக் கேள்வி இன்றுவரை கேட்கக்கூடாத கேள்வியாக இருக்கிறது. உலகெங்கிலுமுள்ள ஆதி குடியின

ரிடையே, மனித சமுதாயத்தின் இனக் குழு நாகரிகம் சார்ந்த சமயச் சடங்கினைப் பெண்களே நிறைவேற்றினர் என்பது