பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. புறநானூற்றின் காலம் முனுைரை வரலாறு (History) என்பது எல்லா நாடுகளிலும் முதன்முதல் பாக்கள், கதைகள் வாயிலாகவே தோன்றியது. அப் பாக்களும் கதைகளும் காலஞ்சென்ற வீரர், அரசர், நல்லோர், தீயோர் இவர்தம் வரலாறுகளையோ, வரலாறுகளிற் காணத்தக்க சிறப்பான நிகழ்ச்சிகளையோ பற்றியனவாக இருந்தன. இங்ங்னம் முதன் முதலில் வரையப்பட்ட பாடல்களும் கதைகளும் பிற்கால அறிஞர்க்கு வரலாறு காட்டும் அடிப்படையாக விளங்கலாயின. மேல்நாட்டில் முதல் முதல் இனிய முறையில் வரலாறு எழுதத் தொடங்கிய ஆசிரியர் எரடோட்டஸ் (Herodotus) என்பவர். அவர் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டாகும். - பின்னர்ப் படிப்பினை பயக்கத்தக்க முறையில் வரலாறுகள் எழுந்தன. அங்ங்ணம் வரைந்தாருள் முதல்வர் து:சிடியஸ் என்பவர். இம்முறையில் எழுதப்பட்ட வரலாறே சிலப்பதிகாரம் என்னும் முத்தமிழ்க் காவியம். ஆயின், முற்கூறியவை அரசர், அலுவலாளர், தலைவர் முதலியோரைப் பற்றிய அரிய நிகழ்ச்சிகளைக் கொண்ட வரலாறுகள் ஆகும்; அவை இனிய செய்யுள் நடையிலும், உர்ைநடையிலும் யாக்கப் பெற்றவை. அத்தகைய வரலாற்று நூல்களை ஒரளவு ஒத்துக்காண்பன புறநானூற்றுப் பாக்கள் என்னலாம். என்னை? சேர, சோழ, பாண்டியர் ஆகிய நெடுநில மன்னர், பாரி போன்ற குறுநில மன்னர், கோவூர்கிழார் போன்ற புலவர் என்பவர் வரலாறுகளைப் புறநானூற்றுப் பாடல்களைக் கொண்டே ஏறத்தாழ வரைந்து முடிக்கலாம் ஆதலின் என்க. புறநானூறு புறநானூற்றுப் பாடல்கள், பழங்கால நிகழ்ச்சிகளைப் பிற்காலத்தார் பாடி வைத்தவை போன்றவை அல்ல. அவை புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/9&oldid=793437" இலிருந்து மீள்விக்கப்பட்டது