பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

پد 38 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நா: - ஒடும் இருக்கும் (சிலபோது) ஒடித்திரியும் (சில போது) இருந்தவிடத்திலேயே இருக்கவும் செய்யும்; அதன் உள்வாய் வெளுத்திருக்கும் அதனுடைய வாயின் உட்புறம் வெண்மையா யிருக்கும்; நாடும் குலை தனக்கு நாணாது - அதற்கு விருப்பமான குரைத்தலிலே ஈடுபடுவதில் அது வெட்கப்படுவதே இல்லை (ஒயாது குரைத்துக் கொண்டேயிருக்கும்). மீனுக்கும் பேனுக்கும் மன்னி லேபிறக்கு மற்றலையி லேமேயும் பின்னிச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள் தேனுந்து சோலைத் திருமலையரா யன்வரையில் மீனும்பே னுஞ்சரியா மே. (56) தேன் உந்து சோலைத் திருமலைராயன் வரையில் - தேன் பாய்கின்ற சோலைகளைக் கொண்ட திருமலைராயனின் மலையிடத்தே. மீனானது: மன் நீரிலே பிறக்கும் - நிலைபெற்ற நீரிலே தோன்றும், மற்று அலையிலே மேயும் அந்த நீர் அலைகளிடத்தே மேய்ந்து கொண்டிருக்கும், பின் நீச்சின் குத்தும் நீந்தும் பொழுது பின்தொடர்ந்து குத்துகின்ற இயல்பும் உடையதாயிருக்கும்; பேனானது. மன் ஈரிலே பிறக்கும் - மலையில் நிலைத்த பேன் முட்டையிடத்திலிருந்து தோன்றும், மன் தலையிலே மேயும் . அடர்த்தியான தலைமயிரிலே திரிந்து செல்லும், பின் ஈச்சின் குத்தும் பின் பெண்களால்எடுத்து 'ஈச என்னும் ஒலியுடனே குத்தவும் படும். பெருமையால் இப்படியான பெருமைகளால், மீனும் பேனும் தம்முள் ஒப்படையன என்று,சொன்னேன் கேள் - யான் சொன்னேன், இதனைக் கேட்பாயாக பனைமரத்திற்கும் வேசைக்கும் கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால் எட்டிப் பன்னாடை இழுத்தலால்-முட்டப்போய் ஆசைவாய்க் கள்ளை யருந்துதலா லப்பனையும் வேசையென லாமே விரைந்து. (57) பனைமரத்தில் : - கட்டித் தழுவுதலால் ஏறும்பொழுது கட்டித் தழுவிக்கொண்டே ஏறுதலாலும், கால்சேர ஏறுதலால் இரு கால்களையும் சேரவைத்து ஏறுதலாலும், எட்டிப்பன்னாடை இழுத்தலால் - உச்சியருகிலே சென்றதும் பன்னாடையை எட்டி இழுத்துக் கட்டுவதனாலும், முட்டப் போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால்-நெருங்கிச்சென்று ஆசையூட்டக்கூடிய கள்ளினை அருந்துதலாலும்;