பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை என்ன உலகமடா ! Π தேமலர்ச் சோலைதனில்-ஒருநாள் சென்று புகுந்திருந்தேன் மாமரக் கூட்டமங்கே-பூத்து மாமணம் வீசியதே தென்றல் உலாவரலால்-இனிமை தேடி வரவுங்கண்டேன் ஒன்றிய நல்லமைதி-நெஞ்சில் ஓங்கிட நின்றிருந்தேன் எங்கிருந் தோஇனிய-குரலொன் றென்னேக் கவர்ந்ததுவே அங்கிருந் தேகினன்கான்-குரல்வரும் அந்தத் திசைவழியே 95