பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 விதைப்போன் மனுடமகன் அந்த விதைகளும் விண்ணரசின் வசனங்களே நிலமோ மனிதர் மனம் அதுவும் நிகழ்தரும் நால்வகை நிலையறிவீர் 18 காற்றையுங் கடலையு மதட்டினது 'மருகேலரா' என்ற மெட்டு ஜயந்த ஸ்ரீ ஆதி பல்லவி சரணாகதி சார்ந்த தேம் பதீ அனுபல்லவி சரணாவதாரீ சருவாதிகாரீ புயன் மோதிவாரி பொரும் ஆதரி (ச) சரணம் கன்னிகை குமார கண்திறந்து பாரே மன்னுலக மூட மலிதரங்கமையா இன்னே மடிகின்றோம் என்னவே பன்னிருவர் அந்நிலை கடிந்தாய் அலைமாருதம் 19 ஐந்தப்பங்கொண்டு ஐயாயிரவருக்கு உணவளித்தது 'அமரநபிமாரே' என்ற மெட்டு பல்லவி மனமுருகுந் தனி மாலை வனாந்தரம் அனுபல்லவி சனம் பெருகும் இனிச்சால முகாந்தரம் தினகரனே செலத் தீவிரமாந்தரம் (ம) சரணம் 1 மாசனம் போகியே மருங்கு கிராமம் முன் போசனம் நாடவே புகன்றனர் சீடரும் 2 போக வேண்டாமவர்க்குப் புது விருந்திடு மென்றே ஈகையாண்டவர் கூற இருமீனைந்தப்ப மென்றார் (ம)