பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அனுபல்லவி

கொடுபோ எகிப்து தாயொடேபின் நான்

கூறுமட்டும் ஆங்கே குடிகூடவே.(எ)

சரணம்
(ஏரோது இறந்தபின் தேவதூதன் சொல்வது)


நெடுநாளாகின சேயைக் கொல்லவே நினைத்தார்

இறந்தார் எழுந்தேக இனி

விடுக யூதேயா ஏரோதின் மகன் வேந்தனானதினால்

நாசரேத்தில் வாழ்.(எ)
 

9
ஏசுவின் இளமை.
'தினமணி வம்ச' என்ற மெட்டு.
பல்லவி

இளமையில் ஏசு இலகவே பெற்றோர் ஏவலில் நின்றார்

அனுபல்லவி


எளியரெனாது தம் இறைமையுமெணாது
குலவினை செய்தொரு குற்றமுளாது (இ)

சரணம்


பெற்றவர் தகைமையைப் பிறர்வியந் தேத்த
பெருந்தகை பேணி பெரியவர்ப்பணிந்து
நித்தனருள் ஞானம் நிலத்தவர் தயவினும்
நிறைமதி நீர்மை நீட வளர்ந்தனர். (இ)

 

10
ஞானஸ்நானம்.
'சங்கற்பமே' என்ற மெட்டு.
பல்லவி

யோர்தான் நதி யோவன்னான் சம்மதி
யூதகுல பதியபிஷேகாவதி

அனுபல்லவி


பாரில் தேவ வதி பண்படூ உந்திதி
பரம்புக மனந்திரும்புவார் கதி (யோ)