பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16


20
பிறவிக்குருடனுக்குப் பார்வையளித்தது.
'காணக்கிடையாத தங்கம்' என்ற மெட்டு.
பல்லவி

ஆனந்தப் பேறாமென் அங்கம்—பர
மானந்தப் பேறாமென் அங்கம்—அதை
மானுங் கரணமில்லை யெங்கும்—மதிவிளங்கும் (ஆ)

சரணம்

1காணச் சுடர்மணியாம் காமர் முகத்தணியாம்
காட்சி நன்மாட்சி சுயாட்சி உரை சாட்சி (ஆ)
2ஏழையென் மீதிரங்கி யிருகண்ணுந் திறந்தவர்
ஈசன் மகேசன் ப்ரகாசன் கிறிஸ்தேசன் (ஆ)
3சேற்றைப் பூசி விடுத்தார் சீலோவாம் நீரடுத்தே
சென்றேன் கை மொண்டேன் கண் கொண்டேன்
உடனே கண்டேன் (ஆ)
4ஒருவர்க்கு மிவ்வற்புதம் உரையாவகை எவ்விதம்
ஓங்கும் நவாங்கம் தான்யாங்கும் உரைத்தாங்கும் (ஆ)


21
மருரூபமானது.
'கொலுமவரெகத' என்ற மெட்டு.
தோடி ஆதி.

பல்லவி

மகிமையேசு பர மாதங்க மேனி

அனுபல்லவி


பகலென முகவொளி பனியுறை கட்டிநிகர்
வகையவர் தேகமும் வஸ்திரமும் ஒளியான (ம)

சரணம்

1மோசே எலியா ஏசு மூவரும் எருசலை
ஏசுமுடிவைப் பற்றிப் பேசினர் நேருமுந்திச்
சீஷர்மா பேதுரு சிறந்த யோவான் யாக்கோபு
கூசவே பார்வை மலைக் கொடிமுடி மேலே (ம)