31
33
சிலுவையின் ஏழு வசனங்கள்.
இராகம் - காப்பி தாளம் - திஸ்ர ஏகம்.
முகவுரை.
பாவிகட்காய்ப் பாரில் வந்தே பாடுபட்டுத் தேகரைந்து
தேவமகன் சிலுவையுரை திவ்யமணி ஏழுமன்பு
சேவைபலித் தேசுபெறச்சிந்தி நெஞ்சே
1எந்தையேநீர் இவர்களுக்கு மன்னித்திடும் தங்கள் செயல்
இன்னதென்றே அறியாதிருக்கின்றனரென் றேசிரந்தார்.
முன்புரைத்த அன்புபொறை பண்புறவே
2என்னையுந்தன் அரசிலெண்ணும் என்றவலக் கள்வனுக்கே
இன்றைக்கு நீ என்னுடனே பரதீசிருப்பாயென்றனர்
எம்பெருமான் வீடளிக்கும் எத்தார்க்கும்
3மாதேயதோ உன்றன்மகன் யோவானதோ உன்றா யென்றார்
மாதாகடன் அன்புமிகும் மாணவனின் மைந்த நிலை
போதரத்தம் தேவிகமும் புண்ணியனார்
4என்தேவனே என்தேவனே ஏனென்னைக்கை விட்டீரென்றே
ஏனைமொழி ஏலிஏலி லாமாசபக் தானி யென்றார்
மானிடனாய்ப் பாடுபட்டே மாண்டதிறம்
5தேகமதால் நீரின்மேலும் தேவிகத்தாற் பாவிமேலும்
தாகமாக இருக்கிறேன் நான் என்று சொன்னார் தம்பிரானும்
பானமின்றிப் பாய்ந்திரத்தம் போன நிலை
6பாவம்பட நாகஞ்சாவு பாதாளம் பேய் மீது வெற்றி
சேவகமோ வேதனையோ ஜீவமீட்போ முடிந்ததென்றார்
பாவபலி யானபெருந் தேவமறி
7எந்தையேஉம் கைகளிலென் ஆவியை ஒப்புவிக்கின்றேன்
என்றுரக்கக் கூவியுடன் எம்பெருமான் மாய்ந்தனரே
தந்தையொடு தாமொருவ ரென்றதகை