பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 145 "சினிமாவிலே நடிக்க வேண்டும்' என்ன செய்ய லாம்? பேட்டிகள் பல படித்து இருக்கிறேன். பாரதிராஜா வின் நினைவு வந்தது. 'ஏன் அவரைப் பற்றிய நினைவு' சரியான கேள்வி. ஏனென்றால் அவர் மூலமாகத்தான் பல நடிகர்கள் திரையைக் கிழித்துக் கொண்டு உள்ளே வந்திருக்கிறார்கள். 'புதுமுகம்” என்றேன். "மொட்டை அடித்த முகம்' என்று அவர் கிண்டல் செய்தார். நான் நரிமுகத்தில் விழிக்கவில்லை. அதற்கப்புறம் புரிந்தது. தலையில் பூச்சூடி நிலாப் போல ஒளிவீசும் வட்டமுகம்தான் புதுமுகம் என்று. சரி போனால் போகட்டும் போடா என்று அந்தத் திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பினேன். வடபழனி கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திக் கொண்டேன். 'உங்களைப் பார்த்தால் ஒரு பைத்தியக்காரனைப் போல இருக்குது” என்றாள் என் மனைவி. ஏன் அப்படிச் சொன்னாள் என்பது புரியவில்லை. பாரதியின் படத்தைக் காட்டினாள். அவருக்குத் தலைப்பாகை இருந்தது. மீசை இருந்தது; எனக்கு இல்லை. இப்பொழுது புரிந்தது. அவரைப் போல நான் ஒரு பைத்தியம் என்பது அவள் கணிப்பு. பாரதிக்கு ஒரு கும்பிடு போட்டேன். 'நீதான் அருள் செய்ய வேண்டும்' என்றேன்.