பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நாரத முனிவரின் பூலோக யாத்திரை 'புராணப் படங்களா? திருவிளையாடற் புராணம் எடுத்தோமே அதைச் சொல்கிறீர்களா' 'அது இல்லை இன்று ராட்சதர்களுக்கும் தேவர் களுக்கும் நடைபெறும் போராட்டத்தை எடுக்கிறீகளாமே” 'அப்படி எல்லாம் இல்லையே' 'கடத்தல்காரர்களை வைத்துப் படம் எடுக்கிறார் களே அதைத் தான் சொல்கிறேன். பெரும்பாலும் படங்களில் இதுபோன்ற வில்லன்கள்தாம் வருகிறார்கள். ரஜனிகாந்த், விஜயசாந்தி இவர்கள்தாம் தெய்வ அவதாரங் கள் என்று கேள்விப்படுகிறார்கள்; சிறுவர்கள் எல்லாம் இவர்களைத்தான் வழிபடுகிறார்களாம் இவர்கள். இந்த வில்லன்களை எதிர்த்து அடிக்கும் படங்கள்தாம் ஒடுகிற தாம். இதுக்கும் புராணப் படங்களுக்கும் எங்களால் வித்தி யாசம் காண முடியவில்லை. அடி உதை இடி மின்னல் இதுதானே தமிழ்ப்படம். இந்த நவீன புராணப்படங்களை தேவலோகத்து ரசிகர்கள் பார்க்க வேண்டுமாம்” என்றார். டி.வி. நிலையத்தில் இவருக்கு ஒரு சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பட்டது. அதற்கு என்றே நியமிக்கப்படும் ஆரணங்கு ஒருத்தி அவரை வளைத்துக் கொள்கிறாள். இவள் தெய்வப் பெண்ணோ மானிடப் பெண்ணோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அவள் கண்கள் இமைத்தன; கால்கள் கால் செருப்பு அணிந்திருந்தன; இதழ்களில் லிப்ஸ்டிக் அவள் வைத் திருந்த பூ பிளாஸ்டிக். அதனால் இவள் மானிடப் பெண்ணே என்று முடிவுக்கு வந்தார். 'நீங்கள் ஒண்டிக் கட்டையா ஜால்ராவா?' என்று ஒரு கேள்வி கேட்டு வைத்தாள். அதாவது மணம் ஆகாதவரா மணம் ஆகி மனைவிக்குத் தாளம் போடுகிறவரா என்பது இதன் அர்த் தம் என்பதைத் தெரிந்து கொண்டார்.