பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25



5. சாமான்ய நிலை

ஓர் ஊரில் அறம் வளர்த்த முதலியார் என ஒருவர் இருந்தார். அவர் ஒரு வேளாளச் செல்வர். அவருடைய சிறந்த அறிவாற்றல்லக் கண்ட அந்த நாட்டு அரசன் அவரைப் பிரதானியாக நியமித்து, அலரிடம் பெருமதிப்பு வைத்திருந்தான்.

அந்த அறம் வளர்த்த முதலியார் சிறந்த அறிவுடையவராக இருந்தமையால், தம்முடைய சொந்த ஊருக்கு வரும் போது பாண்டிய மன்னனைக் கண்டு அளவளாவி விட்டுச் செல்வார்.

அந்தப் பாண்டிய மன்னன் தமிழ்ப் புலமை மிக்கவன்; நல்ல கவிஞன். முதலியார் பேரரசனுடைய பிரதானியாக இருந்தமையால் அவருடைய நட்பானது தனக்குக் கிடைத்தைப் பெரிய பாக்கியமாகக் கருதினான்.

அந்தப் பாண்டிய மன்னன் சில நூல்களை இயற்றினான். அந்த முதலியாரைப் புகழ்ந்து ஒரு சிறிய நூலை இயற்ற வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு உண்டாயிற்று. அவரிடம் சொல்லாமல் அவரைப் பற்றி ஒரு கலம்பகம் பாடினான். அந்தச் செய்தி தமக்குத் தெரிந்த போது, “பிறரால் பாடப் பெறும் தகுதி உள்ள நீங்கள் அடியேனைப் பாடலாமா?” என்று முதலியார் தம் பணிவைக் காட்டிக் கொண்டார். அந்த நூல் பல