பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 117.

நூல் ஆசிரியருக்குப் பூமியை உவமையாகச் சொல்லும் போது, இந்த மாதிரி இயல்புகளையே குறிக்கின்றது. தெரிவரும் பெருமையும்

திண்மையும் பொறையும் பருவம் முயற்சி

அளவிற் பயத்தலும் மருவிய நன்னில

மாண்பா கும்மே. (பொறை-பொறுமை, பயத்தல்-பயன்படுதல். மாண்புஇயல்பு.1

மலை என்ற மாத்திரத்திலே அதனுடைய உன்னதமான சிகரங்களும் பரப்பும் நம் ஞாபகத்துக்கு வருகின்றன. மலை. அளப்பதற்கு அரியது. எத்தனையோ உபயோகமான பொருள்கள் அதன்கண் விளைகின்றன. அவற்றிற்கும் ஒர். எல்லை இல்லை. பெரிய மனிதர்களை மலைக்கு ஒப்பிட்டுப் பேசுவது நம்மவர் வழக்கம். மலையைப் போன்ற சரீரம் உடையவராக இருப்பவரையா அப்படிச் சொல்கிறார்கள்: இல்லை, இல்லை. நிலப் பரப்பின் மேடும் பள்ளமும், ஆறும் குளமும், வயலும் பொழிலும் இருந்தாலும் மலைதான் எல்லோருடைய கண்களிலும் முதலில் படுகிறது. அதுபோல ஒரு நாட்டிலோ, ஓர் ஊரிலோ யார் வந்தாலும் அவர்கள் காதில் யாருடைய புகழ் முதலில் விழுகிறதோ அவரே. பெரிய மனிதர். அந்த ஊருக்கு வராமலே அந்தப் பெரிய மனிதருடைய புகழைப் பலர் அறிந்துகொண்டிருப்பார்கள். வாத்தியார் பெரிய மனிதராக இருக்க வேண்டும். அளக்க லாகா அளவு உடைய மலையைப்போல விளங்க வேண்டும். மலையில் அளக்கலாகாத பொருள்கள் விள்ைகின்றன. ஆசிரியரிடத்தில் உள்ள பொருள்களும் அப்படியே இருக்க வேண்டும். இவரிடம் உள்ள சரக்கு இவ்வளவுதான்’

கி-8