எபந்நியாஸ் யோகம் 111 நாதத்தே கஸ்யசித் பாபம் ந சைவ லக்ருதம் விபு: அஜ்ஞானே-னாவ்ருதம் ஜ்ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ: 15. ஒருவன் பவ மொழிவிக்கலன் நலம் வவ்வலன் விபுவே இருளின் மறை வடையுந்தெரு * = ளிதனின்றுயிர் மருளும். 279 எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்க மெய்துகின்றன. ஜ்ஞானேன துததஜ்ஞானம் யேஷாம் நாசித-மாத்மன: தேஷா-மாதித்யவத் ஜ்ஞானம் ப்ரகாசயதி தத்பரம் 16. எவர்கட் குயிர்பற் றியநல் லுணர்வால் இரிபட் டுளதவ் விதவல் லுணர்வோ அவர்கட் குயர்வா கியவவ் வுணர்வோ ஆதித் தனையொத் தொளிசெய்வதுவே. 220 அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது. தத்புத்தயஸ்-ததாத்மானஸ்-தந்நிஷ்ட்டாஸ்-தத்பராயனா: கச்சந்த்-யபுனராவ்ருத்திம் ஜ்ஞான-நிர்த்துத-கல்மஷா: 17. அதிற்புத்தி யுற்றா ரதிற்சித்தம் வைத்தார் அதைப்பே றெனக்கொண் டதின்னிட்டை பெற்றார் அதைக் கண்ட தாலே பழுக்கைத் துடைத்தார் அவர் மற்று மீளா நிலைச்சேரு வாரால். 221 (அது - உயிர்) பிரம்மத்தில் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டை யெய்தி, அதில் ஈடுபட்டோர். தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள். வித்யா-விநய-லம்பன்னே ட்ராஹ்மனே கவி ஹஸ்தினி சுனிசைவ ச்வபாகே ச பண்டிதா ஸ்மதர்சின: 18 விநயம் வித்தைக னிறைவுறு பணவனில் வெறுமை மெய்ப்பன வணிலொரு பகவினில் வனைகளிற்றினின் ஞமலியின் ஞமலியுண் மனித னிற்சம கனகுவ ரறிவினர். 222