126
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
யினாலும் ஆவதில்லை-அது அவன் செயல்’ என்று கருதி வாழ்க்கையை இழந்தோர் ஏராளமானவர்கள், இதனையுணர்ந்த திருவள்ளுவர் அறிவுடைமையின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார். அவர் காட்டும் அறிவு அமிழ்ந்துகிடக்கும் அறிவு அல்ல; அதிட்டத்தை எதிர் நோக்கியிருக்கும் அறிவல்ல; ஆண்டவனையே நம்பிக் கிடக்கும் அறிவு மல்ல! அறிவுடையார் ஆவதறிவார்’ என்று திருவள்ளுவர் கூறுவது மிகச் சிறந்த கருத்து. சோஷலிச சித்தாந்தத்திற்கு உடன்பட்ட கருத்து.
உலகம் தொன்மையானது. சென்ற காலத்திலும் உலகம் நிகழ்ந்தது-இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, இன்று வாழும் பலர், அறிவிலும் உணர்ச்சியிலும் சென்ற காலத்திலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள். அஃது அறிவின் சின்னமல்ல. இன்றைய உலகம் எங்ஙனம் இயங்குகிறதோ அதன் இயல்புக்கேற்றவாறு தம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதல் அறிவுடைமை. யதார்த்த உலகம், நடைமுறையனுபவம் இவற்றோடு இணைக்கப்பட்ட அறிவே அறிவு என்பது சோஷலிச சித்தாந்தத்தின் அடிப்படை இதனைத் திருக்குறள்,
“எவ்வ துறைவ துலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு”
என்று பேசுகின்றது.
மேலும், அறிவு என்பது வளர்ந்துகொண்ட இருக்கக் கூடிய ஒன்று. அஃது நிலைபெற்ற தன்மையுடையதல்ல. இன்றைய அறிவு நேற்றைய அறிவைவிட வளர்ச்சியுடையதாக இருக்கவேண்டும். இன்றைய அறிவைவிட நாளைய அறிவு வளர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். இதுவே உலக நியதி. திருவள்ளுவரும்,