பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 நாள்வழிக் கவிதைகள்

319



145. தன்னம்பிக்கை

ஓ, மனிதனே!
உன்னை நீ நம்பு!
முதலில் உன்னை நீ இழந்து விடாதே!
நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்துக!
நம்பிக்கையுடன் வாழ்ந்து
வெற்றிகளைக் குவித்த மனிதர்களின்
வரலாறுகள் பலவுண்டு!
குடியே முழுகிப் போனாலும் கவலைப்படாதே!
அமெரிக்கன் ஒருவன்,
வங்கி ஊழலில் சிக்கிச் சீரழிந்து
செல்வமெலாம் இழந்தான்!
அவன் இழந்தது உடைமைகளையே!
உள்ளமாகிய உடைமையை அவன் இழக்கவில்லை!
அவன் பழைய துணிகளைத் தோளில் சுமந்து
வீடு தோறும் கூறி விற்கலானான்!
பின், பழைய துணிகள் விற்பனையை விட்டு
புதியனவிற்கும் கடை தொடங்கினான்
வளர்ந்தான் எண்ணெய் வியாபாரமும் தொடங்கினான்
மீண்டும் பணக்காரன் ஆனான்!
இந்த உலகம் நம்பிக்கை உடையவர்களையே
வாழ்த்துகிறது! பரிசளிக்கிறது!
கடவுளும் கூடத் தன்னம்பிக்கை உடையோரையே
வாழ்விக்கிறான்
ஆம்! மனிதனே!
உன்னுடைய சமயத்தின்...
தளராத் தன்னம்பிக்கையாகவும் விளங்கட்டும்
தனக்குத்தானே எவன் வாழ்கிறானோ
அவனுக்கே கடவுளும் உதவி செய்கிறான்!
பூட்டிய கதவுகள் திறக்கப்படா!
பூட்டிய கதவுகளைத் திறக்கும்
சாவியாக நீ விளங்குக! வாழ்க!