பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

241



முன்னேற்றமெல்லாம் மிகக் குறைந்த முன்னேற்றம் போல் தோன்றுகிறது.

வீடும்-சடங்கும்

குடியிருப்பதற்காகத்தான் வீடு; தண்ணிர் வைப்பதற்காகத்தான் பானை. வீட்டிலுள்ள மனிதனைப் பற்றிக் கவலைப்படாமல் வீட்டைப் பற்றிக் கவலைப் படுவதும், பானையிலுள்ள தண்ணிரைப் பற்றிக் கவலைப் படாமல் பானையைப் பற்றிக் கவலைப்படுவதும் புத்திசாலித் தனமாகுமா? அது போலவே, இங்கு வாழ்கின்ற மனித உயிர் களைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களை வாழ்வாங்கு வாழ வைக்கத் தோன்றிய சமயத்தின் புறச் சடங்குகளைப் பற்றி மட்டும் கவலைப்படுவது புத்திசாலித்தனமாகாது; நியாயமுமாகாது.

விசிறியும்-திருவுருவும்

வெப்பம் நிறைந்த அறையில் நாம் இருக்கும்போது காற்று இல்லாதது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. அப்பொழுது, விசிறிகொண்டு வீசி, காற்றை அசைத்து விட்டு, நாம் அதை அனுபவித்து மகிழ்கிறோம். காற்றை உணர்ந்து அனுபவிக்க விசிறி தேவை.

விண்ணில் ஒலி அலைகள் பரவிப் பாய்ந்து வருகின்றன. எனினும் வானொலிப் பெட்டியின் வாயிலாகவே அதை நாம் கேட்டு அனுபவிக்க முடிகிறது. ஒலி அலைகளைச் செவிப் புலனால் நுகர்ந்து அனுபவிக்க வானொலிப் பெட்டி தேவை. காற்றுப் போல ஒலி அலைகளைப் போல எங்கும் நிறைந்திருக்கிற இறையருளைக் கண்டு-கேட்டு-உண்டு-உயிர்த்து அனுபவிக்கத் திருவுருவங்கள் பயன்படுகின்றன.