பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

413


நடைபோடுவோம்! அறிவறிந்த ஆள்வினை மேற்கொள்வோம்! பொருள் செய்து குவியுங்கள்! உலகம் உண்ண உண்ணுங்கள்! உலகம் உடுத்த உடுத்துங்கள்! சிறந்த ஆன்மிக வாழ்க்கை வாழ்வோம்! அன்பையே உயிர் எனக் கொள்வோம்! வளமுடன் வாழ்வோம்! இலட்சிய சமுதாயம் அமைப்போம்!


10. சமுதாய மேம்பாட்டில் இலக்கியத்தின் பங்கு


(15-10-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

சமுதாயம் மேம்பாடு அடைய, சமுதாயத்தின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும்! அதாவது, மனிதர்கள் நிர்வாணமாகப் பிறப்பதைப் போலவே நிர்மலமான மூளையுடனும், புலன்களுடனும் பிறக்கிறார்கள். பின் கற்றல், கேட்டல், சிந்தித்தல், செயற்படுதல் மூலம் - குறிப்பாக வாழ்தல் மூலம் - புத்திக் கொள்முதல் செய்கிறார்கள்! அறிவு பெறுகிறார்கள்.

மனிதன் அறிந்து அவனுடைய பிறப்பு நிகழ்வது இல்லை. இறக்கும்பொழுது துன்பப்படுகிறான். ஆனால், வாழ மறந்து விடுகிறான். மனிதன் வாழ்ந்தால் இறப்பில் அவன் வருந்தான். மற்றவர்கள் வருந்துவார்கள். இந்தப் பேறு கோடியில் ஒருவருக்குத்தான் கிடைக்கிறது. மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் துயரத்தைக் குறைத்துக் கொண்டு, அன்பு, பரஸ்பர உதவி ஆகியவைகளை மேற்கொண்டு ஒழுகினால் துன்பச் சுமை குறையும்; துயரங்கள் தவிர்க்கப் பெறும்.

வாழ்க்கை என்பது தனக்காக மட்டுமல்ல. உடல் அமைப்பை உற்று நோக்குங்கள்! கண்களின் அமைப்பு, நம்மைப் பார்த்துக் கொள்வதைவிட மற்றவர்களைப்