இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
557
- உம்மால்தான்
- பல மனிதப் படுகொலைகள்
- தடுத்து நிறுத்தப்பட்டன!
- கபால ஓடுகளையும் மனிதக் குருதியையும்
- அடையாளச் சின்னமாய் அணிந்த
- ஆயுதம் ஏந்திய வன்முறையாளர்களை
- அமைதி வழிக்குத் திருப்பிய
- புதிய அகிம்சாமூர்த்தி நீர்தான்
- அனல் பறக்கும் கந்தகக்காட்டின்
- வெப்பத்தைத் தணிக்க
- கற்பக விருட்சமே!
- மனிதப் புனிதரே!
- மனித நேய மிகுதியால்
- நீர்விட்ட கண்ணீர்த்துளிகளே
- மதவெறித் தீயை அணைத்த
- 'புனித நீர்'!
- இரும்புப் பெட்டிகளில் சிறையிருந்த
- இலக்கியத்தை எடுத்து
- ஏழைகளுக்குப் பரிமாறியவரே!
- பாமரனையும்
- பைந்தமிழ் இலக்கியத்தேன் பருகச்
- செய்த பாரிவள்ளலே!
- வெறும் கையில் விபூதிகுங்குமம்
- வரவழைக்கும்
- மாயத்துறவியல்ல நீர்!
- ஆனாலும்
- ஏமாற்றங்களிலே வாழ்கின்ற
- மக்களின் வாழ்க்கையில்
- மாற்றங்களை நிகழ்த்துகின்ற
- மந்திரவாதி நீரே!
- உம்பார்வை பட்ட பின்தான்
- பாலைகள் எல்லாம்
- பசுஞ்சோலைகளாயின!