பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



357



இனிய செல்வ, இது நமது ஊகம். வாக்காளர்களின் எண்ணம் நமக்குத் தெரியாது. ஆனால், வாக்குகள் அளிக்கப் பெற்றுள்ள நடைமுறைகளைப் பார்த்தால் வாக்காளர்களுக்கு இத்தகைய எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை; இருக்கவும் முடியாது ஏன்? தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தந்த தேர்தல் அறிக்கையைப் பற்றி நாட்டில் யாரும் அதிகம் பேசவில்லையே! பத்திரிகைகளிலே கூடத் தேர்தல் அறிக்கைகளைப் பற்றி விவாதங்கள் நடை பெறவில்லையே! இந்த நிலையில் வாக்காளர்களுக்கு எப்படி அரசியல் தெளிவு வரும்! சாதி, பணம், மதம், பிரச்சார பவனிகளின் தோரணைகளிலே வாக்காளர்களின் வாக்குகளைக் கவர்ச்சிக்க முயன்றன அரசியல் கட்சிகள்! இனிய செல்வ, அது மட்டுமா! தேர்தலில் நின்ற அரசியற் கட்சிகள் வெற்றி தோல்விகளை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தன. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து எப்படி அகற்றுவது என்பதைத் தவிர வேறு நோக்கங்கள் இருந்ததாகத் தெரியவில்லை.

இனிய செல்வ, இந்தியா ஒரு பெரியநாடு! பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு; பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் நாடு; ஏழைகள் அதிகம் வாழும் நாடு. இந்த நாட்டை ஆள்கின்ற எந்தக் கட்சியானாலும் அந்தக் கட்சியின் ஆட்சி, இந்திய ஒருமைப்பாட்டினைக் கட்டிக் காப்பாற்றக்கூடிய கொள்கையும், கோட்பாடும் உடையதாக இருக்கவேண்டும். மதச் சார்பற்ற தன்மையுடைய அரசே இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றது. மேலும், நமது இந்திய நாடு பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிறைய உள்ள நாடு. அதுபோலவே சம வாய்ப்புக்களும் பெறாத பல கோடி மக்கள் வாழும் நாடு. ஆதலால் சமநிலை சமவாய்ப்பு சமுதாயக் கோட்பாடே நமக்கு ஏற்றது. இவைகளில் எந்த ஒரு தன்மையையும் நாம் இழப்பது விரும்பத்தக்கதல்ல.

இனிய செல்வ! தேசீய முன்னணி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் சூழல் உருவாகக் கூடும்! அமைய