பக்கம்:குப்பைமேடு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

157

அல்ல; எவனோ மறந்து இங்கே போட்டுவிட்ட சிறு நிகழ்ச்சி; அது எனக்குத் தந்தது புகழ்ச்சி. அது இப் பொழுது என்னை என் சம்பந்தி எள்ளி நகையாட ஏற் பட்ட தாழ்ச்சி; நான் என்ன செய்வது' என்றுதாம் செய்த திருவிளையாட்டுகளுக்கு விளக்கங்கள் தந்தார்.

-5

'இப்பொழுது பானு என்ன செய்கிறாள்?

'பி. எட் அதற்குப் படித்துக் கொண்டு இருக்கிறாள். அஞ்சல்வழிக் கல்வி செய்கிற அநியாயங்களில் இது ஒன்று. மூலை முடுக்குகளில் உள்ள் பெண்களை எல்லாம் படிக்க வைத்து அவர்களுக்குப் பதவி ஆசையை ஊட்டி விடுகிறது. ஏதாவது தொழில் செய்யமுடியும் என்று நம்பிக்கையைத் தந்துவிடுகிறது. பெண்களை இன்று தலைநிமிர்ந்து பேசத் தனித்து வாழ இந்த அஞ்சல்வழிக் கல்வி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. அஞ்சலை நீ அஞ்சாதே நாங்கள் துணை நிற்கிறோம். என்று சொல்வதுபோல் அது இயங்கத் தொடங்கிவிட்டது.

நான் சொல்லிப் பார்த்தேன். உனக்கேன்மா இந்தப் படிப்பு; குழந்தையை வளர்ப்பதற்கே நேரம் போதாது. புருஷன் வீட்டுக்குப் போகப்போறே.

அங்கே போய் நீ தொழிலுக்குப்படிக்கிறாய் என்றால் கேவலமாகப் பார்க்க மாட்டார்களா? ஏற்கனவே நீ எம். ஏ. படித்தது அவர்களுக்கு எரிச்சல், அதாவது படித்தவர் என்று நீ கருதப்படுவாய் என்று அச்சம்; அது பரவா யில்லை; பட்டம்' இன்று பெண்களுக்கு மதிப்புத் தருகிறது. கலியாணப் பத்திரிக்கையில் அச்சிடுவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/159&oldid=1115613" இலிருந்து மீள்விக்கப்பட்டது