இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்
சி.என்.அண்ணாத்துரை
தோற்றம் | - | 15 - 9 -1909 |
தந்தை | - | நடராசன் |
தாய் | - | பங்காரு அம்மாள் |
பிறந்த ஊர் | - | சின்ன காஞ்சிபுரம் |
வாழ்க்கைத் துணை | - | இராணி அம்மையார் |
புனைபெயர் | - | சௌமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன் |
1929 - 1934 | - | சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ ஆனர்சு பொருளியல் பட்டப்படிப்பு |
11-2-1934 | - | முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது |
1-2-1936 | - | சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் 'பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும்காங்கிரசும்' பற்றிச் சொற்பொழிவு |
1936 | - | சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிகட்சி உறுப்பினராக நிற்றல் |
11-4-1937 | - | நீதிக்கட்சிச் செயற்குழு உறுப்பினராதல் |
1937 | - | விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி |
9-12-37 | - | முதற்கவிதை, 'காங்கிரஸ் ஊழல்' விடுதலையில் |
26-9-38 | - | இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு நான்கு மாத வெறுங்காவல் |
13-1-39 | - | தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை |