44
44.
முத்தமிழ் மாமுனி நீள்வரையே-கின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ் நாடு-செல்வம் எத்தனை யுண்டு புவிமீதே-அவை யாவும் படைத்த தமிழ் நாடு. 3
கல்வி சிறந்த தமிழ் நாடு;-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு;-நல்ல பல்விதமாயின சாத்திரத் தின்மணம் பாரெங்கும் வீசும் தமிழ் நாடு. 4.
வள்ளுவன் தன்னே உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு-நெஞ்சை அள்ளுஞ் சிலப்பதி காரமென் ருேர்மணி ஆரம் படைத்த தமிழ் காடு. 5 - பாரதியார்
இப்பாடல்களைப் பாடியவர் பாரதியார் என்பவர். இவருடைய முழுப் பெயர் வரகவி சுப்பி; மணிய பாரதியார் என்பது. இவரது பெற்ருேர்கள் சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மையார். இவர் பிராம்மண குலத்தினர். சைவசமயத்தினர். இவர் 1882ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இறந்தார். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில, பாப்பாப் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியன. இவர் நாட்டுப் பற்ற்ம், மொழிப் பற்றும் நிரம்பப் பெற்றவர். - - -
அருஞ் சொற்கள்
திரை அலை. குமரி கன்னியாகுமரி முனை (இது
தென்கோடியில் உள்ளது.) வட ம | ல வ ன் குன்றம் -
திருப்பதிமலை. இது வேங்கட மலை என்று கூறப்படும்.