பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன் னு ைர

குமுத வாசகம் என்னும் பெயருடன் வெளி வந்துள்ள இந்நூல் சென்னை அரசியலார் புதிதாக வெளி யிட்டுள்ள 1951-ஆம் ஆண்டு பாடதிட்டத்தின்படி எழுதப் பட்டுள்ளது. இது தமிழையே சிறப்புமொழியாக மான வர்கள் படிப்பதற்குரிய சிறப்புப் பகுதியை மட்டும் தன்ன கத்தே கொண்டு திகழ்கிறது.

இலக்கணப் பாடத்தைத் தனித்துப் பயில்வதினும், உரைநடைப் பாடத்தோடு தொடர்ந்து பயிலின், அப் பாடத்தில் ஓர் உணர்ச்சியும் ஊக்கமும் தோன்றும் எனக் கருதி, ஒவ்வோர் உரை நடைப் பகுதியின் கீழும் இலக்கணப் பாடம் எழுதப்பட்டு இருப்பது, மாணவர்கள் தம் தமிழ் அறிவைச் செம்மையுடன் பெறப் பெருந்துணை யாகும் என்பதில் ஐயமில்லை.

அறிவு வளர்ச்சிக்குரிய பல திறப் பாடங்களும், ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் விளுக்களும், பயிற்சியும், வேண்டிய அளவுக்குக் குறிப்புரையும் இந்நூல் தன்கண் கொண்டிருத்தலால், 'பொன்மலர் நாற்றம் உற்ருற்போல்” மாணவர்கள் ஆயாசம் இன்றிப் பாடங்களை நன்கு உணர்ந்து, தம் மனத்தில் பதிய வைத்துக் கொள்வர் என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம்.

இந்நூலில் காணும் பாடல்கள் சிலவற்றை இதில் இணைத்துக்கொள்ளத் தம் இசைவைத் தெரிவித்த உரிமை யாளர்கட்கு என் நன்றியுள்ள வணக்கம் உரித்தாகுக.

இந்நூலைத் தமிழ் உலகம் ஏற்று, என்னை ஆதரித்து ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

ஆக்கியோன்