பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலாடிமிர் மாயகோவ்ஸ்கி

மாயகோவ்ஸ்கி தன் தந்தையின் பிறந்த நாளில் (ஜூலை 7) பிறந்தான். எனவே இருவர் பிறந்த நாளும் வீட்டில் ஒன்ருகவே கொண்டாடப்பட்டன.

ஐந்து வயதிலேயே, தன் வயதுக்கு அதிக மான பாடல்களை மனப்பாடம் செய்து கூறும் ஆற்றலைப் பெற்றிருந்தான். அவன் விரும்பிப் படித்த முதல் நூல் டான் குவிக்சாட்".

ஒரு பக்கம் கவிதை. மற்றொரு பக்கம் புரட்சி. கவிதையும் புரட்சியும் என் உள்ளத் தில் பின்னிப் பிணைந்து விட்டன என்று அவன் இளமைக் குறிப்பில் எழுதியிருக் கிறான். தனது பன்னிரண்டாம் வயதி லேயே, காலையில் கண் விழித்ததும் செய்தித்தாள் வந்துவிட்டதா? என்று தான் முதலில் கேட்பான்.

தனது 16 ஆம் வயதிற்குள் மூன்று முறை சிறைக்குச் சென்றிருக்கிறான். சிறைப் பறவையாய் இருந்தபோது காவல் துறை யினர் அவனுக்குச் சூட்டிய திருநாமம் 'நெட்டையன்'. உயரத்தில் அவன் ஒரு

காக்கஸஸ் , 6 அடி 8 அங்குலம்.

I 12