பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f> முருகுசுந்தரம் 17

தும் பாவேந்தருக்கு அளவு கடந்த கோபம் வந்து விட்டது.

"ராஸ்கல்! நீ எப்படி ரெட்டியாரைக் கீழே உட்கார வைத்து மழிக்கலாம்?’ என்று சொல்லி அடிக்கப் போய் விட்டார். ரெட்டியார் தலையீட்டால் அன்று நாவிதன் பிழைத்தான். உள்ளே இருந்த நாற்காலியை எடுத்து வரச் சொல்லி அதிலே ரெட்டியாரை உட்கார வைத்து முகம் மழிக்கச் சொன்னார் பாவேந்தர்.

வசதிப்படாது

சேலத்தில் 'இன்பஇரவு நாடகம் நடந்து கொண்டிருந்த நேரம். பாவேந்தர் அரிசிப்பாளையத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். பெருஞ்செல்வரும், சேலத்தில் சிறந்த திரைப்படக் கொட்டகை ஒன்றின் முதலாளியுமாக இருந்த ஒருவர் பாவேந்தரைப் பார்க்க விரும்பினார். அவர் தம் பணியாள் ஒருவனைப் பாவேந்தரிடம் அனுப்பி "எங்கள் முதலாளி உங்களை இப்போது பார்க்க விரும்பு கிறார். வரலாமா? இப்போது வசதிப்படுமா?- என்று கேட்டுவரச் சொன்னார்” என்றான்.

உடனே பாவேந்தர் வசதிப்படாது' என்றார். அப்பணி யாள் சென்று விட்டான். அவன் சென்ற பிறகு பாவேந் தர் சிரிசிரியென்று சிரித்தார். நாமென்ன திரைபோட் டுக்கொண்டு ஒவ்வொருவராகவா பார்க்க உள்ளே விடு கிறோம்? பார்க்க வருபவன் வருவது தானே? இவன் முதலாளி என்பது நமக்குத் தெரிய வேண்டுமாம்!” என்று அருகிலிருந்த நண்பரிடம் கூறிச் சிரித்தார்.