பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. முருகுசுந்தரம்/33

வும் பிடித்தமானது' என்று சுட்டினேன். கோவைப் பாடகர் அருச்சுனன் கேள்வி பாவேந்தர் அவர்கட்குப் பெரும் சீற்றத்தை உண்டு பண்ணியது என்று எண்ணு கிறேன். உடன் நிகழ விருந்த இசைத்தமிழ் மாநாட்டுத் தலைமையுரையாக இந்த பாகு ஆசுவரி' இசையின் நுணுக்கத்தையே பேசத் தலைப் பட்டார்கள்.

இனிய என் மென்குரலால், பெண் இழைவது போன்று பாடிக்காட்டிய என்னையும் கடந்து, அரிம்ாக் குரலிலே அப்பண்ணைப் பாவேந்தர் பாடிக்காட்டினார். (ஆசுவரி -விரைந்து இசைக்கும் பாட்டு)

'இந்தப் பாகு ஆசுவரிப் பண்ணை என் பாடகர் மதி வாணன் பெண் பாடுவதுபோன்று பாகாய் இழைத்துக் காட்டினார். சர்க்கரையைப் பாகாய்க் காய்ச்சும்போது அதன்கண் ஓர் இழை தோன்றுவதுபோன்று, இப் பண்ணை இழைக்கும்போது அதிலே தோன்றும் மெல் லிய எடுப்பின் ஓசை (இதை அம்மிங் என்பர்) எல்லாரை யும் மயக்கிவிடுவதால்தான் இது பாகு ஆசுவரி என்ற இனிய தமிழிசைக் கூறினைப் பெற்றிருக்கிறது. இந்த இசைதான் நம் பழந்தமிழ்ப் பாணர்களால் பெரிதும் விரும்பிப் பாடப்பெற்றதாக இசை கூறு நூல்கள் இயம்பு கின்றன. இந்தப் பாகு ஆசுவரி தான் காலத்தால் கடைப்பிடிப்பாரற்றுச் சற்று இனிமை மரீஇ.பெயர்மரீஇ ’பாகேசுவரி' என்று கர்நாடக இசையில் இடம் பெற்று விட்டது.

"இங்குள்ள தமிழ்ப் பண்களையெல்லாம் வடநாட்டார் தமதாக்கிக்கொண்டு உருமாற்றி, பொருள்மாற்றிக் கொண்டுவந்து கோவில்களில் அமர்த்தியுள்ள குட்டிக் கடவுள்களின் பெயரால் கர்நாடக சங்கீதராகம்' என்று விளம்பரப்படுத்துகின்றனர். அப்படி மாறி வழங்குவது தான் பாகேசுவரி' என்ற கர்நாடக இசைப்பண். இங் குள்ள இசையாளர்கள் இதைப் புரிந்து கொள்வது சாலச் சிறந்த ஒன்றாகும்.