இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான்கு வேதங்களையும் நுட்பமாக ஆராய்ந்து, சிந்து வெளித் தமிழகத்தின் சீர்மையை விளக்கி எழுதியவரும்
குத்துாசி குருசாமி வாழ்க்கை வரலாற்று ஆசிரியரும்,
அடிநாள் தொட்டு திராவிட இயக்கத் தொடர் புடையவரும் ஆகிய
தோழர் குருவிக்கரம்பை வேலு அவர்கள்
இந்நூல் முழுமையும் படித்துப் பார்த்து,
திருத்த வேண்டிய இடங்களைத் திருத்தி
நூல் செம்மையாக வெளிவர உதவினார்.
நான் எழுதும் ஒவ்வொரு நூலுக்கும் ஆதாரங்களைத் தேடித் தந்தும்,
கருத்துக் கூறியும்
தொடர்ந்து ஊக்கமூட்டியும் வரும்
தோழர் வேலு அவர்களுக்கு
என் மனம் நிறைந்த நன்றி.